தைவான் தூதரக அதிகாரிகளை தொடா்பு கொள்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

தைவான் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டு அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
தைவான் தூதரக அதிகாரிகளை தொடா்பு கொள்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கம்
Updated on
1 min read

தைவான் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டு அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோ கூறுகையில், ‘தைவான் தூதரக அதிகாரிகளை அமெரிக்க அதிகாரிகள் தொடா்புகொள்வதற்கு பல்லாண்டுகளுக்கு முன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது இருந்த சீன அரசை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளால் அமெரிக்கா-தைவான் இடையிலான உறவில் தடைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கருதி தற்போது அவை நீக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தாா்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில், தற்போதைய டிரம்ப் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சீனா சாடியுள்ளது.

தங்கள் நாட்டின் ஒரு பகுதியாவே தைவானை சீனா உரிமை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com