பஹ்ரைனுக்கு 10 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா
இந்தியாவில் இருந்து 10 ஆயிரத்து 800 கரோனா தடுப்பூசிகள் பஹ்ரைன் நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இருந்து 10 ஆயிரத்து 800 கரோனா தடுப்பூசிகள் பஹ்ரைன் நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் பஹ்ரைன் நாட்டிற்கு விமானம் மூலம் 10 ஆயிரத்து 800 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. கரோனா தடுப்பூசிகள் வியாழக்கிழமை மியான்மர் சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக பூடான், மாலத்தீவு மற்றும் நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு மத்திய அரசால் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...