ஆப்கனில் ராணுவ தளத்தின் மீது கார் வெடிகுண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் ஷிர்சாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தை இலக்காக வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. 
ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி (கோப்புப்படம்)
ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி (கோப்புப்படம்)
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் ஷிர்சாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தை இலக்காக வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. 

இந்த வெடிகுண்டு தாக்குதல் ஷிர்சாத் மாவட்டத்தில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் இன்று காலை கார் வெடிகுண்டு வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராணுவ தளங்களைக் குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் நங்கர்ஹார் காவல்துறைத் தலைவர் குலாம் சனாய் ஸ்டானெக்ஸாய் தெரிவித்தார். 

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.

காந்தர் மற்றும் ஃபரா ஆகிய இரண்டு மாகாணங்களில் ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை 58 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com