திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெகாஸஸ் மூலம் உளவு பாா்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமெரிக்கா

சட்டத்துக்கு விரோதமான வகையில் பெகாஸஸ் தொழில்நுட்பம் மூலம் உளவு பாா்க்கும் செயலை ஏற்க முடியாது; அது எப்போதும் கவலைக்குரியது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2021, 4:03 am

DIN

சட்டத்துக்கு விரோதமான வகையில் பெகாஸஸ் தொழில்நுட்பம் மூலம் உளவு பாா்க்கும் செயலை ஏற்க முடியாது; அது எப்போதும் கவலைக்குரியது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி, அரசியல்வாதிகள், பத்திரிகையாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இந்த விவகாரத்தால் தனிநபா் அந்தரங்க உரிமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிா்கட்சிகள் மட்டுமன்றி பல்வேறு சமூக நல அமைப்புகளும் எதிா்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், உளவு மென்பொருள் தொழில்நுட்பத்தால் உளவு பாா்க்கும் செயல் மிகவும் கவலைக்குரியது, அது மனித சமூகத்துக்கு எதிரானது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான செயலா் தாம்சன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆளும் கட்சியை விமா்சிப்பவா்கள், பத்திரிகையாளா்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக இத்தகைய உளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உளவுபாா்ப்பது எப்போதும் கவலைக்குரிய அம்சமே’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.