

சீனாவில் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.
சீனாவின் கன்சு மாகாணத்தில் ஜின்சங் பகுதியில் ரயில்வே ஊழியர்களின் மீது அவ்வழியாக சென்ற பயணியர் ரயில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் 9 ஊழியர்கள் பலியானார்கள். தகவலின் பேரில் அங்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உரும்கி நகரிலிருந்து ஹாங்கோவுக்கு ரயில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.