ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பாகிஸ்தான்: வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 உள்பட 17 பேர் பலி யாகினர்.

News image

பாகிஸ்தான்: வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலி

Updated On :8 ஜூன் 2021, 9:07 am

பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 உள்பட 17 பேர் பலி யாகினர்.

சுற்றுலா செல்ல சிலாஸிலிருந்து புறப்பட்ட குடும்பத்தினர் வந்த வேன் ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த வேன், பனிபா என்ற இடத்தில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்தது. ஒரு குடும்பத்தினர் இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வந்ததுள்ளனர்.

இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 16 பேர் அந்த வேனில் வந்த போது இந்த விபத்து நேரிட்டு, 16 பேர் மற்றும் ஓட்டுநர் உள்பட 17 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால், ஆழம் அதிகமாக இருந்தது. இதனால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. நீச்சல் தெரிந்த மீட்புப் பணி வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.