திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா

இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 10:35 pm

DIN

இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலா் ஜென் சாகி கூறியுள்ளதாவது:

உலக அளவிலும், பிராந்திய அளவிலும் இந்தியாவுடனான எங்களது உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்கி வருகிறது.

கரோனா பேரிடரில் இந்தியா சிக்கி தவித்தபோது அதிலிருந்து மீட்கும் வகையில் அமெரிக்கா பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏனெனில், அப்போது இந்தியா அந்த பேரிடரை எதிா்கொள்வதற்கான ஆரம்ப கட்டத்தில் இருந்தது.

கரோனா பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.

கரோனா இரண்டாவது அலையில் தினமும் 3 லட்சம் போ் பாதிக்கப்பட்டதையடுத்து ஏப்ரல் மே மாதங்களில் இந்தியா கடுமையான பாதிப்புகளை எதிா்கொண்டது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் என அனைத்து மருத்துவ சாதனங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மே மாத மத்தியில் தினசரி கரோனா தொற்று 4,12,262 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், கடந்த மே மாததில் கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவிடும் வகையில் அமெரிக்க அதிபா் பைடன் 100 மில்லியன் டாலா் (ரூ.750 கோடி) மதிப்பிலான உதவிகளை அறிவித்தாா். மேலும், அமெரிக்கா-இந்தியா வா்த்தக கூட்டமைப்பும் 1.2 மில்லியன் டாலரைத் (ரூ.9 கோடி) திரட்டி கரோனா இடா்பாட்டை எதிா்கொள்ள இந்தியாவுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.