‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை’: குவைத்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என குவைத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என குவைத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு உலக நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த பிற நாடுகளுடனான போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து பல நாடுகளும் உத்தரவு பிறப்பித்துள்ளன.
இந்நிலையில் குவைத் நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக குவைத்திற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி மே 22ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளுக்கு குவைத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திற்கு வரும் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை கட்டாயம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...