பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை’: குவைத்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என குவைத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
டிசம்பர் 2020 காலத்தில் மோசமான வானிலை காரணமாக 5808 விமான பயணங்கள் பாதிப்பு
Updated On :4 மே 2021, 11:02 am

DIN

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என குவைத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு உலக நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த பிற நாடுகளுடனான போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து பல நாடுகளும் உத்தரவு பிறப்பித்துள்ளன. 

இந்நிலையில் குவைத் நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக குவைத்திற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி மே 22ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளுக்கு குவைத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திற்கு வரும் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை கட்டாயம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.