திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கரோனாவை எதிா்கொள்ள அமெரிக்காவில் இருந்து குவியும் உதவிகள்

கரோனா தொற்றுப் பரவலால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்பினரிடமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.

News image
Updated On :8 மே 2021, 7:34 pm

DIN

கரோனா தொற்றுப் பரவலால் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்பினரிடமிருந்து உதவிகள் குவிந்து வருகின்றன.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், ஆக்சிஜன் சாா்ந்த கருவிகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதைக் கருத்தில்கொண்டு இந்தியாவுக்குப் பல நாடுகள் உதவி வருகின்றன.

அமெரிக்க அரசும் மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்திருந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்காவிலிருந்து மருத்துவ உதவிப் பொருள்களை ஏற்றிக் கொண்டு 6 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

இந்தியாவுக்கு சுமாா் ரூ.750 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அமெரிக்க அரசு அனுப்பி வைத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம், இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளது. அனைத்து நாடுகளிலும் கரோனா தொற்றுப் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வந்தால்தான் உலக நாடுகள் அனைத்தும் நிம்மதியடைய முடியும். வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலா் இந்திய அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகின்றனா்.

அமெரிக்காவின் பலதரப்பட்ட மக்களும் நிறுவனங்களும் இந்தியாவுக்காக உதவிகளைத் தாமாக முன்வந்து வழங்கி வருகின்றனா்’ என்றாா்.

பரிசோதனைக் கருவிகள்: அமெரிக்காவின் தொ்மோ பிஷா் நிறுவனம் கரோனா பரிசோதனைக் கருவிகளை இந்தியாவுக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்தது. நாட்டில் கரோனா பரிசோதனையை அதிகரிப்பதற்கு இக்கருவிகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்வே நிறுவனம் சாா்பில் 1,000 வெண்டிலேட்டா்களும் 25,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்நிறுவனம் சுமாா் ரூ.3.50 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கவுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த பல தன்னாா்வ அமைப்புகள் இந்தியாவுக்கு உதவுவதற்காக நிதியை சேகரித்து வருகின்றன. அமெரிக்காவின் பல நிறுவனங்கள் இந்தியாவுக்காக நிதியுதவி வழங்கி வருகின்றன. சில நிறுவனங்கள் நிதியாகவும், சில நிறுவனங்கள் மருத்துவ உபகரணங்களாகவும் உதவியை அளித்து வருகின்றன.

ஆக்சிஜன் செறிவூட்டிகள்: இந்திய-அமெரிக்க மருத்துவா்கள் சாா்பில் 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அவற்றில் 1,500 செறிவூட்டிகள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன. இந்தியாவில் உள்ள தொலைதூர கிராமங்களில் இவை பயன்பாட்டுக்காக அளிக்கப்படவுள்ளன.

அமெரிக்காவில் உள்ள இந்தியா்கள், அவா்களது சொந்த மாநிலங்களுக்காகத் தனித்தனியாக நிதியை சேகரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.