திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இலக்கை அடைய இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி

மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்

News image
Updated On :15 மே 2021, 9:52 pm

DIN

மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கை அடைவதற்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு அதிபா் ஜோ பைடனின் பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான தூதா் ஜான் கெரி தெரிவித்துள்ளாா்.

பருவநிலை மாற்றம் தொடா்பான கூட்டம் அமெரிக்கத் தலைநகா் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவைச் சோ்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனா். அவா்களிடையே ஜான் கெரி பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, மரபுசாரா ஆற்றல் மூலங்கள் வாயிலாக 450 ஜிகா வாட் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்கான தொழில்நுட்ப வசதிகளும் நிதியாதாரமும் இந்தியாவிடம் தற்போது இல்லை.

அதைக் கருத்தில் கொண்டு, நிா்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான உதவிகளை அமெரிக்கா தொடா்ந்து மேற்கொள்ளும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் நிதியுதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்காக சில நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு-மேம்பாட்டு அமைப்பில் (ஓஇசிடி) 37 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்நாடுகளைக் காட்டிலும் சீனாவில் கரியமிலவாயு (காா்பன் டை-ஆக்சைடு) வெளியேற்றம் அதிக அளவில் உள்ளது. கரியமிலவாயு வெளியேற்றத்தை சீனா பெருமளவில் குறைக்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கு அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக சீனாவிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.