மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானுடனான பிரச்னைகளில் நேர்மையாக இருந்துள்ளோம்: மனம் திறந்த அமெரிக்கா

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக உள்ள பாகிஸ்தானுக்கு அப்பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத பிரச்னைகளில் பங்கு உள்ளது என அமெரிக்க தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 அக்டோபர் 2021, 8:56 am

DIN

ஆப்கானிஸ்தானுடனான எல்லை பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்களாக இருப்பது குறித்த விவகாரத்தில் பிரச்னைகளை தெரிவிப்பதில் அமெரிக்கா நீண்ட காலமாகவே நேர்மையாக இருந்துள்ளது என (அமெரிக்க பாதுகாப்புத்துறை) பென்டகன் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் எல்லை பகுதிகள் பல காலமாகவே தலிபான்களுக்கும் மற்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான இடமாக இருந்துவருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் போரிடும் தலிபான்கள் மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தான் செல்வது வழக்கமான ஒன்று. இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாடுகள் கடந்த காலத்தில் தொடர் விமரிசனங்களை மேற்கொண்டிருந்தது. 

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பென்டகன் ஊடக செயலாளர் ஜான் கிர்பி, "நீண்ட நாள்களாகவே, பாகிஸ்தானுடனான பிரச்னைகளில் முற்றிலுமாக நேர்மையாக இருந்துள்ளோம். பாகிஸ்தான் எல்லை பகுதிகள் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக இருந்தது.

தற்போதும், அந்த பிரச்னை நிலவிவருகிறது. ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக உள்ள பாகிஸ்தானுக்கு அப்பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத பிரச்னைகளில் பங்கும் பொறுப்பும் உள்ளது. எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம்.

அதே எல்லை பகுதிகளில் உள்ள பயங்கரவாத குழுக்கள் விடும் அச்சுறுத்தல்களால் பாகிஸ்தான் மக்கள் தொடர்ந்து பாதிப்படைந்திருப்பதை நினைவுகூர்வது முக்கியம் என நினைக்கிறேன். ஆப்கானிஸ்தான் நாட்டுக்கள் ட்ரோன் தாக்குதலை மேற்கொள்வது அமெரிக்காவின் உரிமை. அந்நாட்டை தொடர்ந்து பாதுகாப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது என நம்புகிறோம்.

எங்களின் நலனையும் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க மக்களையும் அங்குள்ள அமெரிக்க மக்களையும் தொடர்ந்து பாதுகாக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. அதை தொடர்ந்து செய்வோம்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.