மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீனாவில் மழை வெள்ளத்தால் 17.6 லட்சம் பேர் பாதிப்பு; 17,000 வீடுகள் சேதம்

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் மழை வெள்ளத்தினால் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் வெள்ளம்
Updated On :11 அக்டோபர் 2021, 9:40 am

DIN

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் மழை வெள்ளத்தினால் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகபட்சமாக அங்கு 185 மிமீ மழை பெய்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மழை வெள்ளத்தினால் அங்கு 17.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1.20 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 1. 8 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
17,000 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

1981 முதல் 2010 வரை அக்டோபரில் தையுவான் பக்தியின் சராசரி மாதாந்திர மழைப்பொழிவு சுமார் 25 மிமீ. மேலும், லின்ஃபென், லுலியாங் மற்றும் சின்சோ போன்ற பிற நகரங்களில் முந்தைய ஆண்டுகளில் அக்டோபரில் சராசரியாக 50 மிமீ மழையே பொழிந்தது. ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 185 மிமீ மழை பெய்துள்ளதால் பாதிப்பு அதிகமாகியுள்ளது. 

மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுமில்லை. செவ்வாய்க்கிழமை ஷான்ஸி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக போக்குவரத்து போலீசார் 4 பேர் உயிரிழந்தனர். 

மேலும், தொடர்ந்து வானிலை மோசமாக இருப்பதால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்புப்பணிகளும் தொய்வடைந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.