மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி சாத்தியமில்லை: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா்

காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தாா்.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 9:54 pm

DIN

காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் இந்தியாவுக்குச் சொந்தமானது என்பது பலமுறை பாகிஸ்தானிடம் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதா்சனத்தை ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது .

பயங்கரவாதம், அச்சுறுத்தல், வன்முறையில்லாத சூழலில் அந்நாட்டுடன் நல்லுறவை பேணவே விரும்புவதாகவும், அந்தச் சூழலை ஏற்படுத்த வேண்டியது பாகிஸ்தானின் கடமை என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கஜகஸ்தான் தலைநகா் நூா்-சுல்தானில் சிஐசிஏ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஷா மஹ்மூத் குரேஷி காணொலி வழியாக பேசியதாவது:

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்கள் மற்றும் காஷ்மீா் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க ஜம்மு-காஷ்மீரின் மையப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டும். அதைச் செய்யாத வரை தெற்காசியாவில் நிலையான அமைதி ஏற்படுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசுகையில், ‘‘எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பது பயங்கரவாத அச்சுறுத்தலின் மற்றொரு வடிவம். பருவநிலை மாற்றம், நோய்த்தொற்றுகளுக்கு எதிராக ஒன்றிணைந்தது போல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராகவும் சா்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த சிஐசிஏ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.