6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

News image
நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா
Updated On :1 செப்டம்பர் 2021, 3:31 pm

DIN

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் 2 மாகாணங்களில் உள்ள பர்சா, பாரா, ரவுதாஹத், சர்லாஹி, மஹோட்டரி மற்றும் தனுஷா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பர்சா மாவட்டத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.