கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

News image

நேபாளத்திற்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கிய இந்தியா

Updated On :1 செப்டம்பர் 2021, 3:31 pm

நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 50 பேர் வரை படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் 2 மாகாணங்களில் உள்ள பர்சா, பாரா, ரவுதாஹத், சர்லாஹி, மஹோட்டரி மற்றும் தனுஷா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பர்சா மாவட்டத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளக் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.