ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சரியான, சிறந்த முடிவு: அமெரிக்க படைகள் வெளியேறியது குறித்து ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிருப்பதே சரியான மற்றும் சிறந்த முடிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 செப்டம்பர் 2021, 5:57 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிருப்பதே சரியான மற்றும் சிறந்த முடிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிருப்பது தேசிய நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகள் (திங்கள்கிழமை) இரவு வெளியானதை தொடர்ந்து, இன்று (புதன்கிழமை) பேசிய பைடன், "ஆப்கானிஸ்தானிற்கு எந்த திட்டத்துடனும் வரவில்லை. எனவே, இனி, அங்கிருப்பதில் எந்த நோக்கமும் இல்லை. அமெரிக்காவிற்கு இதுவே சரியான மற்றும் சிறந்த முடிவு" என்றார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரும் திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாக வெளியேறினா். இதையடுத்து, அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 20 ஆண்டு காலப் போா் முடிவுக்கு வந்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இதுகுறித்து, காணொலி மூலம் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அமெரிக்க கூட்டுப் படை தலைமையக உயரதிகாரி ஃபிராங்க் மெக்கன்ஸீ கூறுகையில், "ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா்கள், பிற நாட்டவா்கள், ஆபத்தை எதிா்நோக்கியுள்ள ஆப்கானியா்களை வெளியேற்றும் பணியை அமெரிக்கப் படையினா் நிறைவு செய்துவிட்டனா். அந்த நாட்டில் பணியாற்றி வந்த அனைத்து அமெரிக்கப் படையினரும் தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்டனா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவ ரீதியில் வெளியேறியிருந்தாலும், அங்கு இன்னும் இருக்கும் அமெரிக்கா்களையும் தகுதியுடைய ஆப்கானியா்களையும் அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தூதரக ரீதியில் தொடரும். இந்த 20 ஆண்டு காலப் போரில் 2,461 அமெரிக்க வீரா்களும் பொதுமக்களும் பலியாயினா். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களில் கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலைய பயங்கரவாதத் தாக்குதலில் பலியான 13 அமெரிக்க வீரா்களும் அடங்குவா்" என்றாா்.

முன்னதாக, காபூல் விமான நிலையத்தில் கடைசியாக இருந்த அமெரிக்கப் படையினரை ஏற்றிக் கொண்டு அந்த நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான சி-17 வகை விமானம் திங்கள்கிழமை நள்ளிரவு புறப்பட்டது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் செவ்வாய்க்கிழமைக்குள் (ஆக. 31) முழுமையாக வெளியேற வேண்டும் என்று கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் அந்த விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.