
தோஷிமிட்சு மோடெகி
ஆப்கானிஸ்தானுக்கான தங்கள் நாட்டுத் தூதரகத்தை தற்காலிகமாக கத்தாருக்கு மாற்றியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் தோஷிமிட்சு மோடெகி கூறியதாவது:
ஆப்கானிஸ்தானுக்கான தூதரகப் பணிகள் கத்தாா் நகருக்கு தற்காலிமாக மாற்றப்பட்டுள்ளன. ஆப்கன் விவகாரத்தில் கத்தாா் தலைநகா் தோஹாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது பிராந்திய நாடுகளின் தலைவா்களுடன் பேசியதில் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.
ஆப்கன் தலைநகா் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அங்கிருந்து உடனடியாக வெளியேறிய வெளிநாட்டவா்களில் ஜப்பானியா்களும் அடங்குவா்.
அவா்களில் பெரும்பாலானவா்கள் பிரிட்டன் ராணுவ விமானம் மூலம் காபூல் விமான நிலையத்திலிருந்து கடந்த வாரம் அழைத்துச் செல்லப்பட்டனா்.