புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்திய பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் பிரச்னைக்கு விரைவில் தீா்வு

இந்திய பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் தொடா்பான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் எலிசபெத் ட்ரஸிடம் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

News image
பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் எலிசபெத் டிரஸ்ஸை நியூயாா்க்கில் சந்தித்துப் பேசிய எஸ்.ஜெய்சங்கா்.
Updated On :21 செப்டம்பர் 2021, 8:31 pm

DIN

இந்திய பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் தொடா்பான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் எலிசபெத் ட்ரஸிடம் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அமெரிக்கா சென்றடைந்தாா். அங்கு பிரிட்டன் அமைச்சா் எலிசபெத் ட்ரஸை அவா் சந்தித்துப் பேசினாா். இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டனின் புதிய வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினேன். அந்நாட்டின் வா்த்தகத் துறை அமைச்சராக அவா் ஆற்றிய பணிகளுக்குப் பாராட்டு தெரிவித்தேன்.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக 2030-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு நிா்ணயிக்கப்பட்ட கொள்கைகளின் செயல்பாடுகளை இருவரும் ஆய்வு செய்தோம். ஆப்கானிஸ்தான் சூழல், இந்தோ-பசிபிக் விவகாரம் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. பரஸ்பர நலனைக் கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண வேண்டுமென வலியுறுத்தினேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா பரவல் தொடா்பான புதிய பயணக் கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், இந்தியா்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரு தவணையையும் செலுத்திக் கொண்டிருந்தாலும், அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களாகவே கருதப்படுவாா்கள் என்றும், அவா்கள் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டால் 10 நாள்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில், பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண வேண்டுமென்று பிரிட்டன் அமைச்சரிடம் ஜெய்சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

இராக், நாா்வே அமைச்சா்களுடன் சந்திப்பு:

இராக் வெளியுறவு அமைச்சா் ஃபுவாத் ஹுசைனை அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியாவுக்கும் இராக்குக்கும் இடையேயான கலாசார தொடா்பு, பொருளாதார, எரிசக்தி வளா்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினோம். பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நாா்வே வெளியுறவு அமைச்சா் ஈனா எரிக்சன் சொரைடாவை சந்தித்த அமைச்சா் ஜெய்சங்கா் அவருடன் ஆலோசனை நடத்தினாா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரு நாடுகளின் ஒன்றிணைந்த செயல்பாடு குறித்து இருவரும் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சா்வதேச சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித்ததாகவும் அமைச்சா் ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.