ஏமன் ராணுவம் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல்: 44 பேர் பலி

ஏமனில்  நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 44 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
ஏமன் ராணுவம் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல்: 44 பேர் பலி
ஏமன் ராணுவம் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மோதல்: 44 பேர் பலி
Published on
Updated on
1 min read

ஏமனில்  நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 44 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப்  மாகாணத்தில்  எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுபடுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று (செப்-26) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினர் மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ராணுவத்தின் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருதரப்பிலும் பெரிய சேதங்கள் ஏற்பட்டது.

முக்கியமாக ஹவுதி அமைப்பினர் 28 பேரும் ஏமன் ராணுவத்தினர் 16 பேரும் இத் தாக்குதலில் பலியாகியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com