மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசர வைத்த விமானப்படையின் சகாச நிகழ்ச்சி; பார்த்து வியந்த சீன மக்கள்

இந்த சாகச நிகழ்ச்சி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்தது. பின்னர், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
விமானப்படையின் சகாச நிகழ்ச்சி
Updated On :30 செப்டம்பர் 2021, 6:43 am

DIN

சீனா விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுத தொழில்நுட்பங்கள் ஆகியவை செவ்வாய்கிழமை அன்று முதல்முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில், 15,000 மீட்டர் உயரத்தில் 20 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட பாதுகாப்பு படையின் ட்ரோன் விமானமும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் சுற்றுப்பாதைக்கு 25 டன் பளுவை தூக்கி செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டை 13 ஆவது சீன சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சீன விண்வெளி கழகம் திட்டமிட்டிருந்ததாக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த சாகச நிகழ்ச்சி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்தது. பின்னர், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

போர் விமானங்கள், ராணுவ தொழில்நுட்பம், ட்ரோன்கள், இதர வன்பொருள்கள் ஆகியவற்றை இராணுவத்திற்கு அர்ப்பணிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கோடிக்கணக்கான டாலர்களைக் செலவழித்துவருகிறது. 

முன்கூட்டியே எச்சரிக்கை விடும் ரேடார் வசதி, வானிலிருந்து கீழ் நோக்கி தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்பட பல ஆயுதங்களை ஏந்தி செல்லும் வகையில் இரண்டு டர்போ ஃபான் என்ஜின்களால் இயக்கப்படும் சிஎச் - 6 ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது என சீன விண்வெளி அறிவியல் கூடம் தெரிவித்துள்ளது. சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் முதல் முறையாக புதிய ஏவுகணைகளை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது.

சிஎச்-817 என்ற சிறிய வகை ட்ரோன் விமானத்தை மக்கள் பார்வைக்கு வைக்க சீனா விண்வெளி அறிவியல் கழகம் திட்டமிட்டுள்ளது. 800 கிராம் எடை உள்ள இந்த ட்ரோன் விமானத்தை ராணுவ வீரர்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பெரிய ரக ட்ரோன் விமானங்களிலிருந்து இந்த சிறிய ட்ரோன் விமானங்களை இயக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.