வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

அசர வைத்த விமானப்படையின் சகாச நிகழ்ச்சி; பார்த்து வியந்த சீன மக்கள்

இந்த சாகச நிகழ்ச்சி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்தது. பின்னர், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image

விமானப்படையின் சகாச நிகழ்ச்சி

Updated On :30 செப்டம்பர் 2021, 6:43 am

சீனா விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுத தொழில்நுட்பங்கள் ஆகியவை செவ்வாய்கிழமை அன்று முதல்முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில், 15,000 மீட்டர் உயரத்தில் 20 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட பாதுகாப்பு படையின் ட்ரோன் விமானமும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் சுற்றுப்பாதைக்கு 25 டன் பளுவை தூக்கி செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டை 13 ஆவது சீன சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சீன விண்வெளி கழகம் திட்டமிட்டிருந்ததாக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த சாகச நிகழ்ச்சி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்தது. பின்னர், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

போர் விமானங்கள், ராணுவ தொழில்நுட்பம், ட்ரோன்கள், இதர வன்பொருள்கள் ஆகியவற்றை இராணுவத்திற்கு அர்ப்பணிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கோடிக்கணக்கான டாலர்களைக் செலவழித்துவருகிறது. 

முன்கூட்டியே எச்சரிக்கை விடும் ரேடார் வசதி, வானிலிருந்து கீழ் நோக்கி தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்பட பல ஆயுதங்களை ஏந்தி செல்லும் வகையில் இரண்டு டர்போ ஃபான் என்ஜின்களால் இயக்கப்படும் சிஎச் - 6 ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது என சீன விண்வெளி அறிவியல் கூடம் தெரிவித்துள்ளது. சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் முதல் முறையாக புதிய ஏவுகணைகளை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது.

சிஎச்-817 என்ற சிறிய வகை ட்ரோன் விமானத்தை மக்கள் பார்வைக்கு வைக்க சீனா விண்வெளி அறிவியல் கழகம் திட்டமிட்டுள்ளது. 800 கிராம் எடை உள்ள இந்த ட்ரோன் விமானத்தை ராணுவ வீரர்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பெரிய ரக ட்ரோன் விமானங்களிலிருந்து இந்த சிறிய ட்ரோன் விமானங்களை இயக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.