பல்வேறு நாடுகளில் வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் நம்மிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை ஏற்படுவதற்கு உலகின் தட்பவெப்பநிலை அதிகரித்ததும் கடல்மட்டம் அதிகரித்ததுமே காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இவை எதிர்காலத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த அறிக்கையை ஐநா காலநிலை அறிவியல் குழு இன்று (திங்கள்கிழமை) வெளியிடவுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வாரமாக இணைய வழி மூலம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, காலநிலை மாற்றம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அரசுக் குழுவுக்கு 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன. இது, கடந்த காலம் மற்றும் எதிர்கால காலநிலை மாற்றம் குறித்த தரவுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
காலநிலை மாற்றம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அறிக்கை விரிவாக பேசவுள்ளது. இந்தியா, சீனம், வட ஐரோப்பா ஆகிய நாடுகளில் பெரு வெள்ளம் உருவாகியுள்ள நிலையில், வட அமெரிக்க மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - கும்பம்
தினப்பலன்கள் - மிதுனம்
தினப்பலன்கள் - தனுசு
தினப்பலன்கள் - விருச்சிகம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


