ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வெடிச் சத்தம் கேட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகப் பதிவுகளில் முதற்கட்டமாக ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் பகிரப்பட்டன.
இதையும் படிக்க | காபூலில் வெடிச் சத்தம்: விமான நிலையம் அருகே பதற்றம்! (விடியோ)
இதுபற்றி ராய்டர்ஸ் தெரிவித்தது:
"காபூல் விமான நிலையத்தின் வடக்குப் பகுதியிலுள்ள வீட்டை ராக்கெட் தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்த இருவர் தெரிவிக்கின்றனர். எனினும், இது உடனடியாக உறுதி செய்யப்படவில்லை."
அசோசியேடட் பிரெஸ்:
"காபூல் விமான நிலையத்தின் வடக்கு-தெற்குப் பகுதியில் ராக்கெட் தாக்கியதில் ஒரு குழந்தை உயிரிழந்ததாக ஆப்கன் காவல் துறைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்."