தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

"நேபாளம்: பிரதமர் சர்மா ஓலி நாடாளுமன்றத்தை எதிர்கொள்வார்'

நேபாளத்தில் நாடாளுமன்றக் கீழவையைக் கலைக்கும் அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஓலி உடனடியாக ராஜிநாமா

News image
Updated On :25 பிப்ரவரி 2021, 3:00 am IST


காத்மாண்டு: நேபாளத்தில் நாடாளுமன்றக் கீழவையைக் கலைக்கும் அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஓலி உடனடியாக ராஜிநாமா செய்யும் மனநிலையில் இல்லை என்றும், அவர் நாடாளுமன்றத்தை எதிர்கொள்வார் என்றும் அவரது ஊடக ஆலோசகர் புதன்கிழமை தெரிவித்தார்.
நேபாள நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்கூட்டியே தேர்தலை நடத்துவதென, பிரதமர் சர்மா ஓலி தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.  இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அறிவித்தது. அரசின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என நீதிபதிகள் குறிப்பிட்டதுடன், கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை 13 நாள்களுக்குள் கூட்ட வேண்டும் என அரசுக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் சர்மா ஓலியின் ஊடக ஆலோசகர் சூர்யா தாபா கூறுகையில், "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சர்ச்சைக்குரியது. எனினும், அதை ஏற்று, செயல்படுத்தவேண்டும். இந்தத் தீர்ப்பு அரசியல் பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்காததால் எதிர்காலத்தில்தான் அதன் விளைவுகள் தெரியவரும். உறுதியற்ற தன்மையையும், அதிகாரப்போக்கையும் மேலும் தூண்டவே இத்தீர்ப்பு வழிவகுக்கும். பிரதமர் உடனடியாக ராஜிநாமா செய்யும் மனநிலையில் இல்லை' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.