தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

அமெரிக்க அதிபர் டிரம்பின் சுட்டுரை கணக்கு முடக்கம்

விதிமுறைகளை மீறியதாக அமெரிக்க அதிரபர் டிரம்பின் சுட்டுரை கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:12 am IST


வாஷிங்டன்: விதிமுறைகளை மீறியதாக அமெரிக்க அதிரபர் டிரம்பின் சுட்டுரை கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே வனமுறை மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக,  டிரம்ப் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்ட3 பதிவுகளை வெளியிட்டார். அதில், தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள். அமைதி காக்கவும் என பதிவிட்டிருந்தார். 

மற்றொரு பதிவில், துணை அதிபர் மைக் பென்ஸுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க "தைரியம்" இல்லை என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், விதிமுறைகளை மீறியதாக, முதல் முறையாக அதிபர் டிரம்பின் 3 பதிவுகளை நீக்கி, சுட்டுரை கணக்கை 12 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது சுட்டுரை நிறுவனம். 

மேலும் வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் டிரம்பின் சுட்டுரை கணக்கு நிரந்தரமாக நீக்கப்பட்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள சுட்டுரை நிறுவனம்,  டிரம்பின் 3 பதிவுகளையும் நீக்கியுள்ளது. தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றுவது போன்று வெளியான விடியோ ஒன்றையும் நீக்கியுள்ளது. 

இதேபோன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் உரையாற்றிய விடியோவை முகநூல் நிறுவனமும் நீக்கியுள்ளது. 

இதுகுறித்து முகநூல் நிறுவன ஒருமைப்பாடு துணை தலைவர் கை ரோசன் கூறியிருப்பதாவது: டிரம்ப் வெளியிட்டுள்ள விடியோவை நீக்கியுள்ளோம். அமெரிக்காவில் நடைபெற்று வரும் கலகங்களை மறைப்பதற்காக நீக்கவில்லை. நடைபெற்று வரும் வன்முறையை ஓரளவு கட்டுக்குள் கொண்வருவதற்கான சமநிலையை அது ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் இதுவொரு 'ஒரு அவசர நிலைமை' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விடியோ பதிவு தொடர்ச்சியான வன்முறைக்கு வழிவகுக்கும் என்பதால் நீக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

இதேபோன்று டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கும் 24 மணிநேரத்திற்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.