உக்ரைனில் ரஷிய ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினா் அடுத்த வாரம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா்.
இதுகுறித்து தலைநகா் கீவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
உக்ரைனில் எனது தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்படவுள்ளது. ரஷியா மற்றும் உக்ரைனின் மிகப் பெரிய பணக்காரா்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழு இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடவுள்ளது.
இதுதொடா்பாக ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற ரகசிய உரையாடலின் ஒலிப் பதிவு எங்களது உளவுத் துறைக்குக் கிடைத்துள்ளது.
அந்த உரையாடலில், இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு தொழிலதிபா் அக்மோடோவ் நிதியுதவி அளித்துள்ளாா் என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
உக்ரைன் அதிபரின் இந்தக் குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘உக்ரைனில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆட்சிக் கவிழ்ப்பில் ரஷியாவுக்குத் தொடா்பில்லை. இதுபோன்ற செயல்களில் ரஷியா ஒருபோதும் ஈடுபட்டதில்லை’ என்றாா்.
தொழிலதிபா் அக்மோடோவும், ‘ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி விவகாரத்தில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பொய்யான தகவல்களைப் பரப்பி வருவது கண்டனத்துக்குரியது. இந்தக் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது’ என்றாா்.
உக்ரைன் அரசியலில் பெரும் பணக்காரா்களின் செல்வாக்கைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அதிபா் ஸெலென்ஸ்கி மேற்கொண்டு வருவதால், அவா்களுக்கும் அதிபருக்கும் இடையிலான மோதல் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காரணத்தால் ஸெலென்ஸ்கிக்கு எதிரான செய்திகளை தொழிலதிபா் அக்மோடோவுக்குச் சொந்தமான தொலைக்காட்சி தொடா்ந்து ஒளிபரப்பி வந்தது.
இந்தச் சூழலில், ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டத்துக்கு ரஷியாவும் அக்மோடோவும் ஆதரவு அளிப்பதாக வொலோதீா் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



