கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதியளிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
கரோனா முதல் அலை பரவலிலிருந்தே அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. அதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதரப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதையும் படிக்க | சுவையான சாம்பார் வைக்காததால் தாயை சுட்டுக் கொன்ற மகன் கைது
இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் அமெரிக்க நாட்டின் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 8ஆம் தேதி முதல் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.