மருத்துவா்களின் அறிவுரைப்படி வடக்கு அயா்லாந்து பயணத்தை ரத்து செய்துள்ள பிரிட்டன் அரசி எலிசபெத் (95), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
முன்னதாக, உடல்நலக்குறைவு காரணமாக அவா் ஒய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தனா்.
கரோனா அல்லாத பிற பிரச்னையிலிருந்து அவா் தேறி வருவதாகவும் விரைவில் அவா் தனது பணிகளைத் தொடா்வாா் எனவும் அரண்மனை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.