கரோனா பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுகாதாரப் பணியாளர்கள் மீது பணியிடைநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என பிரான்ஸ் அரசு எச்சரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்கும் விதமாக பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | குஜராத்தில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என பிரான்ஸ் நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 3 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, மருத்துவப் பணியாளர்கள், அவசரகாலப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.
இதையும் படிக்க | ஹரியாணாவில் செப்.20 முதல் பள்ளிகள் திறப்பு
அரசின் இந்த அறிவிப்பை பின்பற்ற மறுக்கும் பணியாளர்கள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீர்: கீர் பவானி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
விஜய் - ஏ. ஆர். முருகதாஸ்! சர்ச்சைகளைக் கிளப்பிய வெற்றிக் கூட்டணி!

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!
பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




