மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரஷிய எரிபொருள் கிடங்கின் மீது உக்ரைன் தாக்குதல்: போர் தீவிரமாகிறதா?

உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரோடில் எரிபொருள் சேமிப்பு நிலையத்தை உக்ரைன் ராணுவத்தினர் தாக்கியதாக நகரின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 10:52 am

DIN

உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரோடில் எரிபொருள் சேமிப்பு நிலையத்தை உக்ரைன் ராணுவத்தினர் தாக்கியதாக நகரின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளின் ராணுவ  ஆயுதங்கள் உதவியுடன் உக்ரைனும் தொடர்ந்து போரிட்டு வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி அழித்து வருகிறது. 

Story image

இந்நிலையில் ரஷிய எல்லையில் முதல்முறையாக உக்ரைன் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள ரஷிய நகரமான பெல்கோரோடில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கினை, உக்ரைன் படை ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளதாக பெல்கோரோடு நகர ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் தகவல் தெரிவித்துள்ளார். 

Story image

மேலும், இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்ததாகவும் மேலும் நகரத்தின் மூன்று வீதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

முதல்முறையாக ரஷிய நகரில் அதிலும் எரிபொருள் சேமிப்புக் கிடங்கை உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது போர்ச்சூழலில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் போர் தீவிரமடையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.