தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி?

இலங்கையில் அனைத்துக் கட்சியினரை உள்ளடக்கிய அமைச்சரவையை அமைக்க வேண்டும் என முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

News image
மைத்ரிபால சிறிசேன
Updated On :2 ஏப்ரல் 2022, 11:10 am

DIN

இலங்கையில் அனைத்துக் கட்சியினரை உள்ளடக்கிய அமைச்சரவையை அமைக்க வேண்டும் என முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி  உச்சம் தொட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விலை நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் மக்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை நடத்தவே தவித்து வருகின்றனர்.

இதன்காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர். சிக்கல் மேலும் மேலும் தீவிரமடைந்துவருவதால் இலங்கை அரசு அந்நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. மேலும் போராட்டங்களை தவிர்க்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தவிப்பது வேதனையளிப்பதாகக் கூறி ஏற்கெனவே அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் அனைத்துக் கட்சியினரைக் கொண்ட அமைச்சரவையை அமைக்க முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். பொருளாதார சிக்கல் தீவிரமடைந்துள்ளதால் நிலைமையை சமாளிக்க இத்தகைய முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் ஆளும் அரசின் கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை அமைப்பதற்கு வலியுறுத்துவதற்கு மத்திய குழு வெள்ளிக்கிழமை தீர்மானித்ததாக கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆளும் கூட்டணியில் மிகப்பெரிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார நெருக்கடி ஒருபுறம் அதிகரித்துவரும் நிலையில் தற்போது அரசியல் நெருக்கடிக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.