லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சகோதரர் பசில் ராஜபட்ச பதவி பறிப்பு: கோத்தபய நடவடிக்கை

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் நிதித் துறை அமைச்சரும் தன்னுடைய சகோதரருமான பசில் ராஜபட்சவைப் பதவியிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபட்ச நீக்கியுள்ளார்

News image
பசில் ராஜபட்ச பதவி பறிப்பு
Updated On :4 ஏப்ரல் 2022, 8:04 am

DIN

கொழும்பு: இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் நிதித் துறை அமைச்சரும் தன்னுடைய சகோதரருமான பசில் ராஜபட்சவைப் பதவியிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபட்ச நீக்கியுள்ளார். 

தற்போதைய வெளியுறவு செலாவணி பிரச்னையைக் கையாள்வதற்காக இலங்கைக்கு உதவுவதற்கான இந்திய பொருளாதார உதவிகள் தொடர்பாக பசில்தான் பேச்சு நடத்திவருகிறார்.

தவிர, பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான நிதியுதவித் திட்டம் பற்றி விவாதிப்பதற்காக பன்னாட்டு நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவும் பசில் ராஜபட்ச திட்டமிட்டிருந்தார்.

பசில் ராஜபட்ச இருந்த நிதித் துறை அமைச்சர் பொறுப்பில் தற்போது நேற்று வரை நீதித் துறை அமைச்சராக இருந்த அலி சாப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் 26 அமைச்சர்களும் ராஜிநாமா செய்த நிலையில், அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் காபந்து அரசு அமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் நான்கு பேர் புதிய முகங்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.