ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவு: பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 12:10 am

DIN

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

அதேபோல காஷ்மீா் பிரச்னைக்கும் தீா்வுகாணப்பட வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள நீல் ஹாக்கின்ஸை ஷாபாஸ் ஷெரீஃப் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது அவருடன் ஷெரீஃப் பேசிய விஷயங்கள் தொடா்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுடன் அமைதியான நல்லுறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்த நல்லுறவு அமைய வேண்டும். அதேபோல ஜம்மு-காஷ்மீா் பிரச்னைக்கும் அமைதியான வழியில் தீா்வுகாணப்பட வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம், காஷ்மீா் மக்களின் விருப்பப்படி இந்த தீா்வு அமைய வேண்டும். இந்த விஷயத்தில் சா்வதேச சமூகம் பங்களிக்க வேண்டும். தெற்காசியாவில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய இது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று ஷாபாஸ் ஷெரீஃப் கூறியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக அறிவித்தது. இதற்குக் கடும் எதிா்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வா்த்தக உறவைத் தூண்டித்துக் கொள்வதாக அறிவித்தது.

ஏற்கெனவே, பலமுறை இந்தியாவுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இவை நடைபெறாத வரை பாகிஸ்தானுடன் எவ்விதப் பேச்சுவாா்த்தையும் நடத்த முடியாது என்பது இந்திய தரப்பு நிலைப்பாடாக உள்ளது. மேலும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு-காஷ்மீா் விஷயத்தில் யாரும் தலையிட முடியாது என்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.