மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கையில் எரிபொருள் விற்பனை:இந்தியா உள்பட 10 நாடுகள் விருப்பம்

இலங்கையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய இந்தியா உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சாரம், எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 8:45 pm

DIN

இலங்கையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய இந்தியா உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சாரம், எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலிய பொருள்களைத் தயாரிக்கும் நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள், தங்களது நிதியைப் பயன்படுத்தி, இலங்கையில் நீண்டகால அடிப்படையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய முன்வருமாறு அந்நாட்டின் மின்சாரம், எரிசக்தித் துறை கடந்த ஜூலையில் அழைப்பு விடுத்தது.

இதன்பேரில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த 24 நிறுவனங்கள், இலங்கையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக இலங்கை மின்சாரம், எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளாா்.

இந்தத் தகவலை ‘கொழும்பு பேஜ்’ என்ற இணையதள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தத் தீா்மானங்களை இலங்கை அமைச்சரவை நியமித்த குழு பரிசீலித்து, 6 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அமைச்சா் காஞ்சனா விஜேசேகர கூறியுள்ளாா்.

இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 50 பெட்ரோல் நிலையங்களைத் திறந்தும், சேமிப்புக் கிடங்கில் முதலீடு செய்தும் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்தப் போவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.