நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஹிஜாப் போராட்டத்தில் பெண்களுக்கு வெற்றி! ஈரானில் கலாசார காவல் பிரிவு கலைப்பு!

ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், ஈரானில் கலாசார கண்காணிப்பு காவல் துறை பிரிவு கலைக்கப்படுவதாக அந்நாட்டு நீதித்துறை அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 டிசம்பர் 2022, 7:38 pm IST


ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், ஈரானில் கலாசார கண்காணிப்பு காவல் துறை பிரிவு கலைக்கப்படுவதாக அந்நாட்டு நீதித்துறை அறிவித்துள்ளது.

கலாசார கண்காணிப்பு காவல் பிரிவுக்கும், நீதித்துறைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாஃபர் மோன்டாசெரி தெரிவித்துள்ளார். 

ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற இஸ்லாமிய விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க கலாசார கண்காணிப்பு காவல் பிரிவு உருவாக்கப்பட்டது.

ஹிஜாப் அணியாத பெண்களை, இஸ்லாமிய விதிமுறைகளுக்கு எதிராக நடப்பவர்களை அவர்கள் எச்சரித்து அல்லது தண்டனை கொடுத்து அனுப்புவார்கள். 

அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி  மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று, காவலர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

கலாசார கண்காணிப்பு காவல் துறையினர் அமினியை கைது செய்து 3 நாள்கள் காவலில் வைத்து தாக்கியுள்ளனர். அதில், தலையில் பலத்த காயமடந்த அமினி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் பலர் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும், காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் ஹிஜாபைக் கழற்றி தீயிட்டு எரித்தனர்.

இந்த போராட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதலே நடைபெற்று வரும் நிலையில், தற்போது அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் முகமது ஜாஃபர் மோன்டாசெரி, கலாசார கண்காணிப்பு காவல் துறை பிரிவு கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 

நீதித் துறைக்கும் கலாசார கண்காணிப்பு காவல் துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், அந்தப் பிரிவை அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். 

மதம் சார்ந்த மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். 

அவரின் இந்தக் கருத்து ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.