பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பீட்சாவைப்போல் தோற்றமளிக்கும் வியாழன் கோள்: நாசா வெளியிட்ட படங்கள்

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 

நாசா வெளியிட்ட படங்கள்

Published On :

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 

இதில் வியாழன் கோளின் வடக்குப் பகுதியை உணவுப் பொருளான பீட்சாவுடன் ஒப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோள்  மற்ற கோள்களைப் போன்று அல்லாமல், வளையங்களைக் கொண்டுள்ளது. இதனால் அதில் நாசா தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழன் கோளின் வடக்குப் பகுதியை வெப்பத்தைக் கொண்டு அளவிடும் முறையில் எடுக்கப்பட்ட விடியோவை நாசா பகிர்ந்துள்ளது. அதில் வியாழன் கோளின் மேல்பகுதி பீட்சாவைப் போன்று இருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

இதில் அதிகம் மஞ்சள் நிறத்திலுள்ள பகுதிகள், வியாழன் கோளின் ஆழமான பகுதிகள் என்றும், சிவப்பு நிறத்திலுள்ள பகுதிகள் வியாழன் கோளின் மேற்புறப்பகுதி எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.