ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராணுவத்தினர் 40 பேர், மக்கள் 10 பேர் பலி: உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டோரும், மக்களில் 10 பேரும் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:39 am

DIN


உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டோரும், மக்களில் 10 பேரும் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, ரஷிய ராணுவப் படைகள் உக்ரைனுள் நுழையத் தொடங்கின. தலைநகரில் பெரும் வெடி சத்தங்கள் எழுவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், தாக்குதலில் ராணுவத்தினர் 40-க்கும் மேற்பட்டவர்களும், மக்களில் 10 பேரும் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டைப் பாதுகாக்க விருப்பமுள்ள எவருக்கும் ஆயுதங்களைத் தர தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.