நேபாளத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நேபாளம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதனைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு புதியக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | மேகாலயா முதல்வருக்கு கரோனா தொற்று
அதன்படி பொதுஇடங்களில் மக்கள் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் காத்மாண்டுவில் தொற்று பரவல் சூழல் காரணமாக பள்ளிகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்களில் விழாக்களை நடத்தவும், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு 3 நாள்களுக்கு ஒருமுறை கரோனா தொற்று பரிசோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இதுவரை 41 சதவிகித மக்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


