அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

என்னாது இன்னொரு கரோனாவா...பிரிட்டனை அச்சுறுத்தும் புதிய வைரஸ்

பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் கரோனாவிலிருந்து இருந்து புதிய உருமாறிய கரோனா வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 ஜனவரி 2022, 11:12 am

DIN

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்டா, ஒமைக்ரான என உருமாறும் தன்மை கொண்ட கரோனா, விஞ்ஞான உலகுக்கே சவால் விடுத்துவருகிறது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் கரோனாவிலிருந்து இருந்து புதிய உருமாறிய கரோனா வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பிஏ.2 அல்லது ஸ்டெல்த் கரோனா எனப்படும் இந்த உருமாறிய கரோனாவில் உள்ள மாறுபாடுகள் ஒமைக்ரான் போல இல்லை என்பதால் டெல்டாவில் இருந்து இதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை இந்த பிஏ.2 உருமாறிய கரோனாவை ஆய்வாளர்கள் கவலைக்குரிய கரோனா வகையாகப் பட்டியலிடவில்லை. பிரிட்டன் நாட்டில் மட்டும் சுமார் 426 பேருக்கு இந்த புதிய கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, டென்மார்க், சுவீடன், சிங்கப்பூர் நாடுகளிலும் இந்த புதிய கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் கூட சிலருக்கு இந்த புதிய கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டென்மார்க் நாட்டில் தற்போது உறுதி செய்யப்படுவோரில் சுமார் 45% பேருக்கு இந்த கரோனா கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அங்கு பரவல் வேகம் அதிகரித்துள்ளதாகவும் டென்மார்க் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 40 நாடுகளில் இந்த புதிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.