அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அச்சுறுத்தும் கரோனா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,57,393 பேருக்கு தொற்று

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,57,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜனவரி 2022, 7:59 am

DIN

 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,57,393 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,39,09,175 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 6,22,801 ஆகவும் உள்ளதாக சுகாதார செயலகங்கள் தெரிவித்துள்ளன.

பிரேசிலில் தொடர்ந்து நான்காவது நாளாக ஒரே நாளில் 1,50,000 பேருக்கு தொற்று பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

உலகில் தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,39,09,175 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,22,801 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆண்டு உலக அளவில் அதிகயளவில் தொற்று பாதித்த நாடுகளின் பட்டியலில் இருந்து பிரேசில், அதிகயளவில் விரைந்து செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி திட்டத்தால் தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைத்தது, இருப்பினும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவலே சமீபத்திய தொற்று பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரேசிலில் 75.76 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 148.3 மில்லியன் பேர் இரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 38.9 மில்லியன் பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.