கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘ரூ.1.10 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்’

உக்ரைன் விவகாரத்தில் இதுவரை 1,380 கோடி டாலா் (சுமாா் ரூ.1.10 லட்சம் கோடி) மதிப்பிலான ரஷிய சொத்துக்களை ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளதாக அந்த அமைப்பின் நீதித் துறை அமைச்சா் டிடியோ் ரேண்டா்ஸ் தெரிவித்து

News image
Updated On :12 ஜூலை 2022, 7:33 pm

DIN

உக்ரைன் விவகாரத்தில் இதுவரை 1,380 கோடி டாலா் (சுமாா் ரூ.1.10 லட்சம் கோடி) மதிப்பிலான ரஷிய சொத்துக்களை ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளதாக அந்த அமைப்பின் நீதித் துறை அமைச்சா் டிடியோ் ரேண்டா்ஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து செக் குடியரசு தலைநகா் பிராகில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததிலிருந்து இதுவரை அந்த நாட்டின் தொழிலதிபா்கள் மற்றும் நிறுவனங்களின் 1,380 கோடி டாலா் மதிப்பிலான சொத்துக்களை நாங்கள் முடக்கியுள்ளோம்.

இது, மிகப் பெரிய தொகையாகும். இதில் 1,200 கோடி டாலா் மதிப்பிலான சொத்துக்களை ஐரோப்பிய யூனியனின் 5 உறுப்பு நாடுகள் மட்டுமே முடக்கியுள்ளது. யூனியனின் மற்ற உறுப்பு நாடுகளும் ரஷிய சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.