முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பினை இரு குழந்தைகளிடம் கண்டறிந்ததாக அமெரிக்காவின் தேசிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வரும் நிலையில் அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தகவலின் படி கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஒரு கைக்குழந்தை. இன்னொருவர் அமெரிக்காவை நாட்டைச் சேராத குழந்தை எனவும் தெரிய வருகிறது.
நோய் பாதிப்பினை கண்டறிந்த பின்பு அது எவ்வாறு பரவியிருக்கும் என்பதனை விசாரித்து வருவதாக தகவல் தெரிகிறது. குழந்தைகளுக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் துணை இயக்குநர் ஜெனிஃபர் மெக்குயிஷ்டின் கூறியதாவது:
ஐரோப்பாவிலும் மற்ற பகுதியிலும் நோய் பாதிப்பு அதிகமாக பரவி வரும் நிலையில் பெண்களும் குழந்தைகளும் பாதிப்படைவதை பார்த்தோம். அதனால் குழந்தை பாதிப்படைந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம். 3 இலட்சம் குரங்கம்மை தடுப்பூசிகளை வாங்கியிள்ளோம். இன்னும் சில நாட்களில் 1 இலட்சம் மக்களுக்காவது தடுப்பூசி செலுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவருக்குப் பாராட்டு

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


