

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 28,203 கன அடியாக சரிந்தது.
கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து குறைந்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 28,203 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 33,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 10,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 64 கோடியை தாண்டியது!
அணையின் நீர்மட்டம் 120.06 அடியாகவும், நீர் இருப்பு 93.56 டி.எம்.சி யாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.