சான் பிரான்சிஸ்கோ: தகவல்தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர்கள், வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் அலுவலகத்துக்குத் திரும்பவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஎன்பிசி வெளியிட்டிருக்கும் செய்தியில், கரோனா பேரிடர் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வரும் நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல நாடுகளில் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், அலுவலகங்கள் திறக்கப்பட்டு, ஊழியர்கள் பணிக்குத் திரும்பும் சுமூகமான நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் அலுவலகம் திரும்ப அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறிய மிகப்பெரிய முன்னணி முதல் நிறுவனமாக ஆப்பிள் இருந்தது. அது கடந்த 2020 மார்ச் மாதத்திலேயே தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

பெண்கள் கருத்தரிக்க உதவும் 10 உணவுகள்!

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


