மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ரஷியா போரை நிறுத்த வேண்டும்: அர்னால்ட்

உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

News image

அர்னால்ட்

Updated On :18 மார்ச் 2022, 1:46 pm IST

உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 23 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

மேலும், போரை நிறுத்த வேண்டும் என்கிற சர்வதேச நீதிமன்ற ஆணையை ரஷியா நிராகரித்தது.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா மாகாண ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் உக்ரைன் போர் குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’ரஷியா தான் முதலில் போரைத் தொடர்ந்தது அதனால் உடனடியாக உக்ரைன் மீதான போரை அவர்கள் நிறுத்த வேண்டும். நீங்கள் துப்பாக்கிகளால் சுடுவது எதிரிகளை அல்ல உங்கள் சகோதர, சகோதரிகளைத் தான். உக்ரைன் ராணுவ வீரர்கள் புதிய நாயகர்களாக மாறியிருக்கிறார்கள். ரஷிய வீரர்கள் இதைக் கேட்டால் நான் பேசியது உண்மை என அறிவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.