47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போரில் ரஷியப் படையினர் 26,350 பேர் பலி: உக்ரைன்

உக்ரைனுடனான போரில் 26,350 ரஷிய வீரர்கள் பலியானதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
உக்ரைன் போரால் சிதிலமைடைந்த பகுதி
Updated On :11 மே 2022, 8:26 am

DIN

உக்ரைனுடனான போரில் 26,350 ரஷிய வீரர்கள் பலியானதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்தது. இரண்டு மாதங்களைக் கடந்து தொடர்ந்து வரும் போரில் உக்ரைனின் தலைநகா் கீவை ரஷிய படைகளால் கைப்பற்ற முடியாவிட்டாலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மரியுபோலை முழுமையாக கைப்பற்றியுள்ளன.

குறிப்பாக, ரஷியப் படைகள் கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் தாக்குதலில் ரஷியப் படையினர் 26,350 பேர் பலியானதாகவும் ரஷியாவுக்குச் சொந்தமான  1,187 டாங்கிகள், 2,856 ஆயுதமேந்திய வாகனங்கள், 166 ஹெலிகாப்டர்கள் மற்றும் 199 விமானங்களையும் அழித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.