அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

நேட்டோவில் இணைய கையெழுத்திட்ட ஸ்வீடன்

ஸ்வீடன் இன்று (செவ்வாய்க்கிழமை) 30 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :17 மே 2022, 3:25 pm IST

30 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்து ஸ்வீடன் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்திட்டது.

நேற்று முன் தினம் நேட்டோ அமைப்பில் இணைய விரும்புவதாக ஸ்வீடன் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் இன்று நேட்டாவில் இணைவதற்கான கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. ஸ்வீடனைத் தொடர்ந்து ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து கையெழுத்திட உள்ளதாக தெரிகிறது. 

நேட்டோவில் இணைய எடுத்திருக்கும் இந்த இரு நாடுகளின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஸ்வீடன் தனது இந்த முடிவின் மூலம் கடந்த 200 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ராணுவ அணிசேராக் கொள்கையில் மாற்றம் வந்துள்ளது. அதேபோல இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஃபின்லாந்தும் அணிசேராகக் கொள்கையை பின்பற்றி வருகிறது. இந்த இரு நாடுகளின் இந்த முடிவும் கிரெம்லினின் (kremlin) புருவங்களை உயரச் செய்துள்ளது..

நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் துரிதமாக இந்த இரு நாடுகளையும் இந்த கூட்டமைப்பில் இணைக்க ஆர்வம் காட்டும் நிலையில் துருக்கி அதற்கு தடையாக இருந்து வருகிறது. துருக்கியிலிருந்து தப்பி இந்த இரு நாடுகளில் இருக்கும் குற்றவாளிகளை மீண்டும் துருக்கியிடம் ஒப்படைக்க அந்த நாடுகள் மறுப்பதால் துருக்கி இவ்வாறு செயல்பட்டு வருகிறது. 

நேட்டோவில் புதிதாக ஒரு நாடு இணைய வேண்டுமென்றால் அந்த கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.