மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கரோனாவை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்தை எதிர்த்து போராடும் மாணவர்கள்

சீனாவின் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் மற்றும்  கரோனாவை  முற்றிலும் ஒழிக்கும்  திட்டத்திற்கு எதிராக உள்ளூர் நிர்வாகத்தினை எதிர்த்து டியான்ஜின் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2022, 11:45 am

சீனாவின் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் மற்றும்  கரோனாவை  முற்றிலும் ஒழிக்கும்  திட்டத்திற்கு எதிராக உள்ளூர் நிர்வாகத்தினை எதிர்த்து டியான்ஜின் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டியான்ஜின் பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த மே 26ஆம் தேதி உள்ளூர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அதிகாரத்துவம் ஒழிக போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

சீனா அமல்படுத்தி இருக்கும் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளினால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மாணவர்களுக்கு பல்கலைக் கழக தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுவதாகவும், பல்கலைக் கழக அதிகாரிகளுடன் மாணவர்களுக்கு சரியான புரிதல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகமும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. 

முன்னதாக மே மாதத்தின் இடையில் பெக்கிங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சீனாவின் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்தக் கடும் கட்டுப்பாட்டினால் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் நிலை உருவானது.

கடுமையான கரோனா கட்டுப்பாடுகளால் விலைவாசி பெருமளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.