கந்தகார்: கந்தகார் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வரும் தலிபான்கள், அங்கு 13 வயது, அதற்கு மேற்பட்ட மற்றும் பூப்படைந்த மாணவிகள் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஏற்கனவே கல்வியை இழந்த 30 லட்சம் பெண்களுடன் இவர்களும் சேர்ந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | வழிகிற தேவனும் சாக்லேட் வர்மனும் - யாருடைய பொன்னியின் செல்வன் இவன்?
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, 13 வயதுடைய சிறுமிகள், அதற்கு மேற்பட்ட பெண்கள், பூப்படைந்தவர்கள், 6வது பயிலும் பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பெண் கல்வியை தடுப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு கண்டங்களை தலிபான்கள் எதிர்கொண்டு வந்தாலும் தங்களது முடிவிலிருந்து அவர்கள் பின்வாங்குவதாக இல்லை.
இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி, பூப்படைந்த பெண்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து படிக்கக் கூடாது. தற்போது ஆப்கானிஸ்தானில் போதுமான ஆசிரியைகள் இல்லாததால், பெண்களை கல்வி பயில அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கின்றனர்.
தலிபான்கள் பதவியேற்பதற்கு முன்னதாகவே, பல இருபாலர் பள்ளிகளிலிருந்து பெண்கள் பள்ளிகள் தனியாக பிரிக்கப்பட்டுவிட்டன. பெண் கல்வியில், தலிபான்கள் யாருக்குமே சலுகைகள் அளிக்கவும் தயாராக இல்லை.
கந்தகாரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தன்னைப் போல சுமார் 100 சிறுமிகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அவர் கவலையுடன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜியோ விண்ணப்பத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% உயர்வு!
வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புதிய தலைவரான இந்தியர்!

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!

உற்பத்தித் திறனை ஆண்டுக்கு இரட்டிப்பாக்க இலக்கு: வேதாந்தா அலுமினியம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




