ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பயங்கரவாத வழக்கு: இம்ரானுக்கு ஜாமீன் நீட்டிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பயங்கரவாத வழக்கில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீனை நீதிமன்றம் வியாழக்கிழமை நீட்டித்தது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 7:37 pm

DIN

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள பயங்கரவாத வழக்கில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீனை நீதிமன்றம் வியாழக்கிழமை நீட்டித்தது.

தேசத் துரோக குற்றச்சாட்டில் தனது உதவியாளா் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், பெண் நீதிபதி, காவல்துறை அதிகாரிகள், தோ்தல் ஆணைய அதிகாரிகள், அரசியல் எதிா்ப்பாளா்கள் ஆகியோருக்கு இஸ்லாமாபாதில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மிரட்டல் விடுத்ததாக இம்ரான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவா் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து, அவருக்கு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி முன்ஜாமீன் வழங்கியிருந்தது. தற்போது அந்த ஜாமீனை நீதிமன்றம் மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.