ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணி எலிசபெத்தின் உருவப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகள் செல்லுமா?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது புகைப்படம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News image
மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்
Updated On :10 செப்டம்பர் 2022, 12:28 pm

DIN


லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது புகைப்படம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக பிரிட்டனில் அச்சாகும் ரூபாய் நோட்டுகளிலும், நாணயங்களிலும் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

வியாழக்கிழமை இரவு அவர் காலமான நிலையில், அந்த ரூபாய் நோட்டுகள் என்னவாகும்? உடனடியாக ரூபாய் நோட்டுகள் மாற்றப்படுமா என்ற கேள்விகளுக்கு இல்லை என்றே பதில் வந்துள்ளது.

அதாவது, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூ ஸிலாந்து நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் எலிசபெத் புகைப்படம் அடங்கிய ரூபாய் நோட்டுகள் உடனடியாக மாற்றப்படாது என்றும், எலிசபெத் புகைப்படத்துக்கு மாற்றாக, புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புகைப்படம் இடம்பெறும். ஆனால் அதுவும் உடனடியாக நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, எலிசபெத் உருவம் பொறித்த ரூபாய் மற்றும் நாணயங்கள் புழக்கதில்தான் இருக்கும். புதிய மன்னரின் புகைப்படம் அடங்கிய ரூபாய் போட்டுகள் வடிவமைக்கப்பட்டு, அச்சடிக்கப்பட்டு மெல்ல புழக்கத்துக்குக் கொண்டு வரப்படும். ஒட்டுமொத்தமாக எலிசபெத்தின் புகைப்படம் அடங்கிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து முற்றிலும் இல்லாமல் போக பல ஆண்டு காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.