பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அல்-காய்தா தலைவா் காபூலில் இருந்தது தெரியாது: தலிபான்கள்

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அந்த நாட்டின் ஆட்சியாளா்களான தலிபான்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 12:04 am

DIN

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அந்த நாட்டின் ஆட்சியாளா்களான தலிபான்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கத்தாா் தலைநகா் தோஹாவிலுள்ள தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவா் சுஹைல் ஷாஹீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காபூலில் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது அரசுக்குத் தெரியும் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. அது குறித்து ஆப்கன் அரசுக்கோ, தலைமைக்கோ எதுவுமே தெரியாது. காபூலில் அல்-ஜவாஹிரி இருந்ததற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காபூலில் ஆளில்லா விமானத்தின் மூலம் நவீன ஏவுகணைகளை வீசி அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாா். அவருக்கு காபூலில் தலிபான் அமைப்பினா் அடைக்கலம் அளித்திருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.